வல்லமை பேசேல்
உன்னுடைய சாமர்த்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே
|
Vallamai Pesel.
Don't self-praise.
|
வாது முற்கூறேல்
பெரியோர்களிடத்தில் முறன் பட்டு வாதிடாதே
|
Vaathu Murkooral.
Don't gossip or spread rumor.
|
வித்தை விரும்பு
கல்வியாகிய நற்பொருளை விரும்பு
|
Vithai Virumbu.
Long to learn.
|
வீடு பெற நில்
முக்தியை பெறுவதற்கான சன்மார்கத்திலே வாழ்க்கையை நடத்து
|
Veedu Pera Nil.
Work for a peaceful life.
|
உத்தமனாய் இரு
உயர்ந்த குணங்கள் கொண்டவனாக வாழ்
|
Uthanamai Iru.
Lead exemplary life.
|
ஊருடன் கூடி வாழ்
ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்
|
Oorudan Koodi Vazh.
Live amicably.
|
வெட்டெனப் பேசேல்
யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே.
|
Vettena Pesel.
Don't be harsh with words and deeds.
|
வேண்டி வினை செயேல்
வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே
|
Vendi Vinai Seyel
Don't premeditate harm.
|
வைகறைத் துயில் எழு
நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு
|
Vaigarai Thuyil Ezhu.
Be an early-riser.
|
ஒன்னாரைத் தேறேல்
பகைவர்களை நம்பாதே
|
Onnaarai Thaerael.
Never join your enemy.
|
ஓரம் சொல்லேல்
எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசு.
|
Oram Sollael
Be impartial in judgement.
|
Aathichudi ஆத்திச்சூடி ஔவையாரால் எழுதப்பட்டது. இதில் 109 வரிகள் அகரவரிசையில் மற்றும் ஒற்றை வரி மேற்கோள்களாக தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூல் அனைவருக்கும் நல்ல பழக்கம் மற்றும் நல்லொழுக்கம் பற்றி கூறுகிறது. ஆத்திச்சூடி எப்போதும் தமிழ் கற்றல் குழந்தைகளுக்கு முதல் தமிழ் பாடமாக வைக்கப்படுகிறது. எனவே குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். நாம் வாழ்க்கையில் , செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை பற்றி இந்நூல் எளிய மற்றும் சிறு வாக்கியத்தில் கூறியுள்ளது.. ஔவையார் பற்றி ஔவையார் என்னும் பெயர் பூண்ட பெண் கவிஞர்கள் பலர் இருந்தனர். ஔவையார் சோழ வம்சத்தின் ஆட்சியின் போது கம்பர் மற்றும் ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்து வந்தார். ஒளவை என்பது மூதாட்டி அல்லது தவப்பெண் என்ற கருத்தை உடையது. இவர் பல புகழ்பெற்ற பாடல்கள் எழுதியுள்ளார். அவை இன்றும் தமிழ்நாட்டின் பள்ளிகளின் புத்தகத்தில் இடப்பெற்று இருக்கிறது. ஆத்திசூடி அனைத்து வயது மக்களுக்கும் ஏற்றது. தமிழ் மொழி தெரியாத மக்களுக்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டது. About Aathichudi
Comments
Post a Comment