Skip to main content

சகர வருக்கம் / Sagara Varukkam


சக்கர நெறி நில்
தர்மசக்கர நெறிப்படி வாழ வேண்டும்.
Sakkara Neri Nil.
Honour your Lands Constitution.
சான்றோர் இனத்து இரு
அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.
Sandrol Inathu Iru.
Associate with the noble.
சித்திரம் பேசேல்
பொய்யான வார்தைகளை மெய் போலப் பேசாதே
Sithiram Pesael.
Stop being paradoxical.
சீர்மை மறவேல்
புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.
Seermai Maravel.
Remember to be righteous.
சுளிக்கச் சொல்லேல்
கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்
Sulikka Sollel.
Don't hurt others feelings.
சூது விரும்பேல்
ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.
Soodhu Virumbel.
Don't gamble.
செய்வன திருந்தச் செய்
செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்
Seivana Thirundha Sei.
Action with perfection.
சேரிடம் அறிந்து சேர்
சேரிடம் அறிந்து சேர்நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.
Seridam Arinthu Ser.
Seek out good friends.
சையெனத் திரியேல்
பெரியோர் \'சீ\' என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே
Saiyenath Thiriyel.
Avoid being insulted.
சொற் சோர்வு படேல்
பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே
Sor Sorvu Padel.
Don't show fatigue in conversation.
சோம்பித் திரியேல்
முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே
Sombi Thiriyel.
Don't be a lazybones.

Comments

Popular posts from this blog

ஆத்திசூடி / Aathichudi

Aathichudi ஆத்திச்சூடி ஔவையாரால்  எழுதப்பட்டது.  இதில் 109 வரிகள் அகரவரிசையில் மற்றும் ஒற்றை வரி மேற்கோள்களாக தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூல் அனைவருக்கும் நல்ல பழக்கம் மற்றும் நல்லொழுக்கம் பற்றி கூறுகிறது. ஆத்திச்சூடி எப்போதும் தமிழ் கற்றல் குழந்தைகளுக்கு முதல் தமிழ் பாடமாக வைக்கப்படுகிறது.   எனவே குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். நாம் வாழ்க்கையில் , செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை பற்றி இந்நூல் எளிய மற்றும் சிறு வாக்கியத்தில் கூறியுள்ளது.. ஔவையார்  பற்றி ஔவையார் என்னும் பெயர் பூண்ட பெண் கவிஞர்கள் பலர் இருந்தனர்.   ஔவையார் சோழ வம்சத்தின் ஆட்சியின் போது கம்பர் மற்றும் ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்து வந்தார். ஒளவை என்பது மூதாட்டி அல்லது தவப்பெண் என்ற கருத்தை உடையது.  இவர் பல புகழ்பெற்ற பாடல்கள் எழுதியுள்ளார்.  அவை இன்றும் தமிழ்நாட்டின் பள்ளிகளின் புத்தகத்தில் இடப்பெற்று இருக்கிறது. ஆத்திசூடி அனைத்து வயது மக்களுக்கும் ஏற்றது.  தமிழ் மொழி தெரியாத மக்களுக்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டது. About Aathichudi