Skip to main content

மகர வருக்கம் / Magara Varukkam


மனம் தடுமாறேல்
எதனாலும் மனக்கலக்கம் அடையாதே
Manam Thadumarel.
Don't vacillate.
மாற்றானுக்கு இடம் கொடேல்
பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே.
Matranukku Idam Kodel.
Don't accommodate your enemy.
மிகைபடச் சொல்லேல்
சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.
Migaipada Sollel.
Don't over dramatize.
மீதூண் விரும்பேல்
மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.
Meethoon Virumbel.
Don't be a glutton.
முனைமுகத்து நில்லேல்
எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே
Munaimugathu Nillel.
Don't join an unjust fight.
மூர்க்கரோடு இணங்கேல்
மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே
Moorkarodu Inangel.
Don't agree with the stubborn.
மெல்லி நல்லாள் தோள்சேர்
பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.
Melli Nallaal Tholeser.
Stick with your exemplary wife.
மேன்மக்கள் சொல் கேள்
நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.
Menmakkam Sol Kel
Listen to men of quality.
மை விழியார் மனை அகல்
விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்
Mai Vizhiyor Manai Agal.
Dissociate from the jealous.
மொழிவது அற மொழி
சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல் பாதுகாத்து வாழ்.
Mozhivathu Ara Mozhi.
Speak with clarity.
மோகத்தை முனி
நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு
Mogathai Muni.
Hate any desire for lust.

Comments

Popular posts from this blog

ஆத்திசூடி / Aathichudi

Aathichudi ஆத்திச்சூடி ஔவையாரால்  எழுதப்பட்டது.  இதில் 109 வரிகள் அகரவரிசையில் மற்றும் ஒற்றை வரி மேற்கோள்களாக தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூல் அனைவருக்கும் நல்ல பழக்கம் மற்றும் நல்லொழுக்கம் பற்றி கூறுகிறது. ஆத்திச்சூடி எப்போதும் தமிழ் கற்றல் குழந்தைகளுக்கு முதல் தமிழ் பாடமாக வைக்கப்படுகிறது.   எனவே குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். நாம் வாழ்க்கையில் , செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை பற்றி இந்நூல் எளிய மற்றும் சிறு வாக்கியத்தில் கூறியுள்ளது.. ஔவையார்  பற்றி ஔவையார் என்னும் பெயர் பூண்ட பெண் கவிஞர்கள் பலர் இருந்தனர்.   ஔவையார் சோழ வம்சத்தின் ஆட்சியின் போது கம்பர் மற்றும் ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்து வந்தார். ஒளவை என்பது மூதாட்டி அல்லது தவப்பெண் என்ற கருத்தை உடையது.  இவர் பல புகழ்பெற்ற பாடல்கள் எழுதியுள்ளார்.  அவை இன்றும் தமிழ்நாட்டின் பள்ளிகளின் புத்தகத்தில் இடப்பெற்று இருக்கிறது. ஆத்திசூடி அனைத்து வயது மக்களுக்கும் ஏற்றது.  தமிழ் மொழி தெரியாத மக்களுக்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டது. About Aathichudi