Skip to main content

தகர வருக்கம் / Thagara Varukkam


தக்கோன் எனத் திரி
பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்
Dakkon Enath Thiri.
Be trustworthy.
தானமது விரும்பு
யாசிப்பவர்களுக்கு தானம் செய்.
Dhanamadhu Virumbu.
Be kind to the unfortunate.
திருமாலுக்கு அடிமை செய்
நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்
Thirumalukku Adimai Sei.
Serve the protector.
தீவினை அகற்று
பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.
Theevinai Agatru.
Don't sin
துன்பத்திற்கு இடம் கொடேல்
முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே
Thunbathirku Idam Kodel.
Don't attract suffering.
தூக்கி வினை செய்
ஒரு வேளையை முடிப்பதற்க்கான் வழிமுறைகளை நன்கு ஆராயிந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும்
Thooki Vinai Sei.
Deliberate every action.
தெய்வம் இகழேல்
கடவுளை பழிக்காதே.
Dheivam Igazhel.
Don't defame the divine.
தேசத்தோடு ஒட்டி வாழ்
உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்
Desthodu Otti Vaazh.
Live in unison with your countrymen.
தையல் சொல் கேளேல்
மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே
Thaiyal Sol Kelel.
Don't listen to the designing.
தொன்மை மறவேல்
பழமையாகிய நட்பினை மறந்துவிடாதே.
Thonmai Maravel.
Don't forget your past glory.
தோற்பன தொடரேல்
ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே.
Thorpana Thodarel.
Don\'t compete if sure of defeat.

Comments

Popular posts from this blog

ஆத்திசூடி / Aathichudi

Aathichudi ஆத்திச்சூடி ஔவையாரால்  எழுதப்பட்டது.  இதில் 109 வரிகள் அகரவரிசையில் மற்றும் ஒற்றை வரி மேற்கோள்களாக தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூல் அனைவருக்கும் நல்ல பழக்கம் மற்றும் நல்லொழுக்கம் பற்றி கூறுகிறது. ஆத்திச்சூடி எப்போதும் தமிழ் கற்றல் குழந்தைகளுக்கு முதல் தமிழ் பாடமாக வைக்கப்படுகிறது.   எனவே குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். நாம் வாழ்க்கையில் , செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை பற்றி இந்நூல் எளிய மற்றும் சிறு வாக்கியத்தில் கூறியுள்ளது.. ஔவையார்  பற்றி ஔவையார் என்னும் பெயர் பூண்ட பெண் கவிஞர்கள் பலர் இருந்தனர்.   ஔவையார் சோழ வம்சத்தின் ஆட்சியின் போது கம்பர் மற்றும் ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்து வந்தார். ஒளவை என்பது மூதாட்டி அல்லது தவப்பெண் என்ற கருத்தை உடையது.  இவர் பல புகழ்பெற்ற பாடல்கள் எழுதியுள்ளார்.  அவை இன்றும் தமிழ்நாட்டின் பள்ளிகளின் புத்தகத்தில் இடப்பெற்று இருக்கிறது. ஆத்திசூடி அனைத்து வயது மக்களுக்கும் ஏற்றது.  தமிழ் மொழி தெரியாத மக்களுக்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டது. About Aathichudi