Skip to main content

உயிர்மெய் வருக்கம் / Uyir Mei Varukkam


கண்டொன்று சொல்லேல்
கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே.
Kandondru Sollel
Don't exaggerate what you saw.
ஙப் போல் வளை
ஙகரம் போல் பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும்
Gna Pole Valai.
Bend to befriend.
சனி நீராடு
சனி(குளிர்ந்த) நீராடு
Sani Neeradu.
Shower regularly.
ஞயம்பட உரை
கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு.
Gnyampada Urai.
Sweeten your speech.
இடம்பட வீடு எடேல்
உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.
Idampada Veedu Edel.
Judiciously space your home.
இணக்கம் அறிந்து இணங்கு
ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.
Inakkam Arinthu Inangu.
Befriend the best.

தந்தை தாய்ப் பேண்
உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.
Thanthai Thaai Paen.
Protect your parents.
நன்றி மறவேல்
ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே
Nandri Maravel.
Don't forget gratitude.
பருவத்தே பயிர் செய்
எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.
Paruvathe Payir Sei.
Husbandry has its season.
மண் பறித்து உண்ணேல்
பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே
Man Parithu Unnel.
Don't land-grab.
இயல்பு அலாதன செய்யேல்
நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.
Iyalbu Alathana Seyyel.
Desist demeaning deeds.
அரவம் ஆட்டேல்
பாம்புகளை பிடித்து விளையாடாதே
Aravam Aattel.
Don\'t play with snakes.
இலவம் பஞ்சில் துயில்
\'இலவம் பஞ்சு\' எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு
Ilavam Panjil Thuyil.
Cotton bed better for comfort.
வஞ்சகம் பேசேல்
கபடச்(உண்மைக்கு புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களை பேசாதே
Vanjagam Pesel.
Don't wile.
அழகு அலாதன செய்யேல்
இழிவான செயல்களை செய்யாதே
Azhagu Alaathana Seyyel.
Detest the disorderly.

இளமையில் கல்
இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை (இலக்கணத்தையும், கணிதத்தையும்) தவறாமல் கற்றுக்கொள்.
Ilamaiyil Kal.
Learn when young.
அறனை மறவேல்
தருமத்தை எப்போதும் மறவாமல் செய்
Aranai Maravel.
Cherish charity.
அனந்தல் ஆடேல்
மிகுதியாக தூங்காதே
Ananthal Aadel.
Over sleeping is obnoxious.

Comments

Popular posts from this blog

ஆத்திசூடி / Aathichudi

Aathichudi ஆத்திச்சூடி ஔவையாரால்  எழுதப்பட்டது.  இதில் 109 வரிகள் அகரவரிசையில் மற்றும் ஒற்றை வரி மேற்கோள்களாக தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூல் அனைவருக்கும் நல்ல பழக்கம் மற்றும் நல்லொழுக்கம் பற்றி கூறுகிறது. ஆத்திச்சூடி எப்போதும் தமிழ் கற்றல் குழந்தைகளுக்கு முதல் தமிழ் பாடமாக வைக்கப்படுகிறது.   எனவே குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். நாம் வாழ்க்கையில் , செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை பற்றி இந்நூல் எளிய மற்றும் சிறு வாக்கியத்தில் கூறியுள்ளது.. ஔவையார்  பற்றி ஔவையார் என்னும் பெயர் பூண்ட பெண் கவிஞர்கள் பலர் இருந்தனர்.   ஔவையார் சோழ வம்சத்தின் ஆட்சியின் போது கம்பர் மற்றும் ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்து வந்தார். ஒளவை என்பது மூதாட்டி அல்லது தவப்பெண் என்ற கருத்தை உடையது.  இவர் பல புகழ்பெற்ற பாடல்கள் எழுதியுள்ளார்.  அவை இன்றும் தமிழ்நாட்டின் பள்ளிகளின் புத்தகத்தில் இடப்பெற்று இருக்கிறது. ஆத்திசூடி அனைத்து வயது மக்களுக்கும் ஏற்றது.  தமிழ் மொழி தெரியாத மக்களுக்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டது. About Aathichudi